SU RAVI'S PORTAL




Hi,
Welcome to "SWETHA PADHMAM"-(The White Lotus)-Abode of SARASWATHI-The Goddess of all forms of Fine-arts.My passions - MUSIC, ART & POETRY(TAMIL) are Shared herein. Welcome again to the White Lotus! Wish you a happy blogging!-Su.Ravi

Thursday, April 14, 2011

thakshinaamuurthi

காலடி அமர்ந்து நாலவர்
    கைகளைக் கூப்பிக் கேட்க
ஆலடி அமர்ந்து ஞானம்
    அருளிடும் தேவா போற்றி!

தென்திசை நோக்கி உந்தன்
    திருமுகம் காட்டிக் கையில்
சின்முத் திரை தரித்த்
    சிவபெரு மானே போற்றி,

விழியிலே ஞானம் பொங்கும்,
    விரிசடை கங்கை தங்கும்
மொழியெனும் அலைகளில்லா
   மௌனமாம் கடலே போற்றி!

இகபர சுகங்கள் என்ற
    இருளிலே ஆழ்ந்தி டாமல்
அகஒளி ஏற்றி என்னை
    ஆட்கொளும் குருவே போற்றி!

பிறைநிலா முடியில் சூடும்
    பிஞ்ஞகா, யோகமூர்த்தீ!
குறைவிலா ஞானம் தந்த
   குருபரா போற்றி, போற்றி!

0 Comments:

Post a Comment

<< Home