SU RAVI'S PORTAL




Hi,
Welcome to "SWETHA PADHMAM"-(The White Lotus)-Abode of SARASWATHI-The Goddess of all forms of Fine-arts.My passions - MUSIC, ART & POETRY(TAMIL) are Shared herein. Welcome again to the White Lotus! Wish you a happy blogging!-Su.Ravi

Friday, August 17, 2012

விடையேறும் எங்கள் பரமன்













சடைவார்குழல்   நதியோடொரு   மதிசூடிய     பெருமான்
கொடியாமிடை   உடையாள்உமை ஒருபோதிலும் பிரியான்   
தடையாவையும்  பொடியாய்விழ   உடனேஅருள் புரிவான்
விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

பனிவார்சடை    அரவோடொரு  பிறைசூடிய    பெருமான்
கனிவாய்மொழி   கருணாகரி     கணமேயினும்  பிரியான்
இனியோரிடர்     தொடராவணம் இனிதேயருள்   புரிவான்
விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

முகிலோடிய      சடைமீதினில்   நிலவோடிய   பெருமான்
துகில்மூடிய       நகிலாள்உமை  துணையோர்கணம் பிரியான்
புகல்நாடிய        அடியாரிடர்     கெடவேஅருள்   புரிவான்
விடைவாகனன்    பதமேகதி        எனநாடுக    மனமே!

புகைபோல்படர்    சடைமீதினில்    புனல்சூடிய   பெருமான்
முகைபோலிரு    முலையாள்உமை முகமோர்கணம் பிரியான்
பகை, நோய்,பிணி அணுகாவணம்    பதமாயருள் புரிவான்
விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

மலர்சூடிய     சடைமீதினில்     மதிசூடிய    பெருமான்
லலிதாம்பிகை  உமையாள்இடம்  ஒருவேளையும் பிரியான்
கலியாம்விதி   தொடராவணம்    கடிதேயருள்  புரிவான்
விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

சு.ரவி

Labels:

0 Comments:

Post a Comment

<< Home