SU RAVI'S PORTAL




Hi,
Welcome to "SWETHA PADHMAM"-(The White Lotus)-Abode of SARASWATHI-The Goddess of all forms of Fine-arts.My passions - MUSIC, ART & POETRY(TAMIL) are Shared herein. Welcome again to the White Lotus! Wish you a happy blogging!-Su.Ravi

Wednesday, March 16, 2011

கணபதியே1.. ஸ்ரஸ்வதியே!


சபரி மலைக்குச் செல்லும் போது சொல்லும் வழிநடை கோஷ்ங்களான
"ஸ்வாமியே ஐயப்பா - ஐயப்பா ஸ்வாமியே " என்பதைத் தொடர்ந்து
பக்த்ர்கள் " கணபதியேஸ்ரஸ்வதியே 'என்ற நாமாவளியை விளித்துச்
செல்வர். தவிர, பல கேலண்டர், நோட்டுப் புத்தகங்கள், ஸ்வாமி படங்களிலும் கணபதியுடன்
ஸ்ரஸ்வதி வீற்றிருக்கும் காட்சியைப் பார்த்திருக்கிறோம்.
இந்த கணபதி -ஸரஸ்வதி combinaton என்னைச் சிந்திக்க வைத்தது.
சுக்லாம்பரதரன், மோனநிலை அருளும் மூலாதார மூர்த்தி, ப்ரணவஸ்வரூபன்,
லம்போதரன், தந்தம் ஒன்றோடெழுந்தருளும் அம்பாஸுதன்,
விகடன், விக்னராஜன், விநாயகன், கணநாதன், கஜமுகன் - இவன் ஞானகாரகன்.
தெள்ளிய நீரில், அன்னப் பறவல்கள் சூழ, வெண்தாமரை மேல் வெண்பட்டுடுத்தி,
வீணை இசைக்கும் வேதமாதா, விதியுவதி, விந்த்யநிவாஸினி, வித்யாதாயினி
ச்யாமளை, ராஜமாதங்கி,சகலகலாவல்லி, ஸரஸ்வதி, கலைவாணி,பாரதி -இவள் ஞானதாயினி
மோனமும், ஞானமும் வேண்டி நாம் சேர்ந்து சொல்லுவோம்
" கணபதியே1.. ஸ்ரஸ்வதியே!

Labels:

Friday, March 11, 2011

ஷோடஸி பூஜை


"கடவுளை நேரில் காண்கிறேன்; உனக்கும் காட்டுகிறேன்" என்று உறுதிபடக் கூறிய மஹான்.

தம் மனைவியார் சாரதா தேவியை பவதாரிணியாக ஆவாஹனம் செய்து ஷோடஸிபூஜை செய்த உன்னதக் காட்சியை எண்ணெய் வண்ண ஓவியமாக்கியுள்ளேன்.

அன்னையார் முகத்தில் சாந்தியும், குருமஹராஜ் முகத்தின் பக்திப் பரவசமும் என்னை ஈர்த்தவை.

சு.ரவி 12/3/2011